தொடர் விடுமுறையால் உதகைக்கு படையெடுத்துள்ள சுற்றுலா பயணிகள் - திருவிழாக்கோலம் பூண்ட சுற்றுலா தலங்கள்!

தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகைக்கு படையெடுத்துள்ளதால் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.


நீலகிரி: தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகைக்கு படையெடுத்துள்ளனர்.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகையில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் காலமாகும். அப்போது நிலவும் இதமான காலநிலையை அனுபவித்து சுற்றுலாத்தலங்களை கண்டு ரசிப்பதற்காக சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டிற்கான கோடை சீசன் தற்போது தொடங்கி உள்ளது.



இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே தினந்தோறும் சுற்றுலா பயணிகளின் வருகை படிப்படியாக அதிகரித்து வருகிறது.



குறிப்பாக தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக அதிகரித்துள்ளது.



அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் உதகை தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தளங்களை காண குவிந்து வருவதால் சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.



சமவெளி பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தமிழகத்தை சார்ந்த சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் உதகைக்கு படையெடுத்து வருகின்றனர்.

இதனால் உதகைக்கு செல்லும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் காணப்படுகிறது. அவற்றை போக்குவரத்து போலீசார் உடனுக்குடன் சீர் செய்து வருகின்றனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...