தாராபுரத்தில் நடந்த தொடர் கொள்ளை வழக்கு - வாகன சோதனையில் சிக்கிய 4வது குற்றவாளி!

தாராபுரத்தில் பூட்டிய வீடுகளில் கதவுகளை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த 4வது நபரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில், இவர் திண்டுக்கல் மாவட்டம், மீனம்பட்டியை சேர்ந்த ராமர் என்று தெரியவந்தது. தாராபுரத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது ராமர் பிடிபட்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புறநகர் பகுதிகளில் பூட்டி இருந்த வீடுகளை கண்காணித்து, கதவுகளை உடைத்து அடுத்தடுத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 4 நபர்கள் கொண்ட குழுவில் மூன்று பேரை போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர் இந்நிலையில் இவர்களது கூட்டாளிகளில் நான்காவது நபரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், தாராபுரம் கரூர் சாலை ஆச்சியூர் பிரிவு அருகே காவல் துணை கண்காணிப்பாளர் தன்ராஜ் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் கருப்புசாமி, முத்துக்குமார், முருகேசன், தலைமை காவலர்கள் வேலுமணி, கார்த்திக் கலைச்செல்வன், பாலசுப்பிரமணியன், ராமர் ராமலிங்கம் ஆகிய போலீசார் அடங்கிய குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த சான்ட்ரோ கார் ஒன்றை தடுத்து நிறுத்தி, அதை ஓட்டி வந்த இளைஞரிடம் விசாரணை நடத்தினர்.



அதில், அந்த நபர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா மீனம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த சந்தனத்துரை என்பவரது மகன் ராமர் (வயது 26) என்பது தெரியவந்தது. மேலும், தாராபுரம் புறநகர் பகுதியான அசோக் நகர் செல்லத்துரை என்பவரது வீட்டில் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட மூன்று நபர்களுடன் இவருக்கும் தொடர்பிருந்தது உறுதிசெய்யப்பட்டது.



இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், தொடர்ந்து நடத்திய விசாரணையில், அசோக் நகர் செல்லத்துரை வீட்டில் கொள்ளை அடித்த மூன்று சவரன் தங்க நகை அரை கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவைகளையும், கொள்ளையடித்த பணத்தில் விலைக்கு வாங்கிய ரூ 2 -1/2 லட்சம் மதிப்புள்ள சான்ட்ரோ கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிபதி பாபு, தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலின் நான்காவது குற்றவாளியான ராமரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து, அவர் தாராபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...