பொள்ளாச்சியில் பலத்த பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ் பேரணி

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் சீருடை அணிந்தபடி 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்டனர். ஆர்.எஸ்.எஸ் ரதம் மீது பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர்.


கோவை: பொள்ளாச்சியில் நடந்த ஆர்எஸ்எஸ் பேரணியில், தொண்டர்கள் வெள்ளைசட்டை, சீருடை அணிந்து பேண்ட் வாத்தியம் முழங்க பேரணியாக நடந்து வந்தனர்.

தமிழகத்தில் 45 இடங்களில் இன்று ஆர்.எஸ்.எஸ் சார்பில் பேரணி நடைபெற்றது.



அதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சியில் பல்லடம் சாலையில் ராஜேஸ்வரி மண்டபத்தில் தொடங்கிய ஆர்.எஸ்.எஸ். பேரணி பைவ் கார்னர், மகாலிங்கபுரம் ரவுண்டானா, கோவை சாலை வழியாக காந்தி சிலை வந்து அங்கிருந்து புதிய திட்டை சாலை வழியாக மீண்டும் ராஜேஸ்வரி மண்டபத்தை அடைந்தது.



இதில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் வெள்ளைசட்டை, சீருடை அணிந்து பேண்ட் வாத்தியம் முழங்க பேரணியாக கம்பிரமாக நடந்துவந்தனர்.



அப்போது, பேரணியுடன் வந்த ஆர்.எஸ்.எஸ் ரதம் மீது பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர்.



இந்த பேரணியில் மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை ஆகிய பகுதிகளில் இருந்து வந்த 500-க்கும் மேற்பட்ட ஆர் எஸ்எஸ் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.



இந்தப் பேரணியையொட்டி, கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் 450-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...