வால்பாறை அருகே காட்டுத் தீ - மரங்கள், செடிகொடிகள் எரிந்து சேதம்

வால்பாறை அருகே அட்டகட்டி வரையாட்டு பாறை பகுதியில் காட்டு தீ ஏற்பட்டு உள்ளது. தீ அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். தீ விபத்து குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில்வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் காடுகளில் தண்ணீர் வறண்டு, மரங்களில் உள்ள இலைகள் காய்ந்து,காடுகள் வறட்சியாக காணப்படுகிறது.



வனத்துறையினர் காட்டு தீ ஏற்படாத வண்ணம்பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட அட்டகட்டி பகுதியில் உள்ள வரையாட்டுப்பாறை வனப்பகுதிக்குள் திடீர் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.



சுமார் 7 மணி அளவில் ஏற்பட்ட இந்தத் தீ நள்ளிரவுவரை வனப்பகுதியில் பரவியதில் அங்கிருந்த புற்கள், மரங்கள் எரிந்து சாம்பலகின. வால்பாறை வனத்துறை வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையிலும் பொள்ளாச்சி வனத்துறையினர் சார்பாகவும் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனவர்கள் காட்டிற்குள் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது. வனப்பகுதிக்குள் எவ்வாறு தீ பிடித்தது என்று வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...