கோவை அருகே 7வது நாளாக எரியும் காட்டுத் தீ - மாலைக்குள் கட்டுப்படுத்தப்படும் என வனத்துறை தகவல்

கோவை ஆலாந்துறை மேற்குதொடர்ச்சி மலையில் 7 ஆவது பற்றி எரியும் காட்டு தீ, இன்று மாலைக்குள் அணைக்கப்பட்டுவிடும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 90 சதவீத தீ ஏற்கனவே அணைக்கப்பட்ட நிலையில், இன்று கூடுதல் பணியாளர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவை ஆலாந்துறை நாதேகவுன்டன்புதூர் பகுதி மேற்குதொடர்ச்சி மலை வனப்பகுதியில் கடந்த 11 ஆம் தேதி காட்டு தீ பரவியது.

சுமார் 150 ஹெக்டேர் பரப்பரளவில் பற்றியெரிந்த தீயை அணைக்கும் பணியில், கோவை, உடுமலை, நீலகிரி, ஈரோடு, சிறுமுகை உள்ளிட்ட வனச்சரகத்தில் இருந்து வந்த சுமார் 250க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் ஈடுபட்டனர்.



இந்நிலையில் காட்டுத் தீயை அணைக்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் படி இராணுவ ஹெலிகாப்டர் மூலம் தீ அணைக்கும் பணி நடைபெற்றது. ஹெலிகாப்டர் மூலம் சுமார் 22 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொண்டு, அதிகளவு தீ பிடித்து எரிந்த 4 இடங்கள் முழுமையாக அணைக்கப்பட்டது.



இந்த விபத்தில், 15 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த மரங்கள், செடிகொடிகள், முழுமையாக தீக்கு இரையாகியுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு வரை 90 சதவீதம் தீ அணைக்கப்பட்டது.



இதைத் தொடர்ந்து, இன்று மீண்டும் சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கூடுதல் பணியாளர்களுடன் 7 ஆவது நாளாக தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மாலைக்குள் முழுமையாக தீ அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்படும் என வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...