கோவை ஆர்.எஸ்.எஸ்.பேரணியில் நிபந்தனை மீறல் - நிர்வாகிகள் 4 பேர் மீது வழக்கு

கோவையில் நடந்த ஆர்.எஸ்.எஸ் பேரணியில் உயர் நீதிமன்ற கூறிய நிபந்தனைகளை மீறியது, பொது இடத்தில் சிலம்பம் சுற்றி ஆயுதப் பயிற்சி எடுத்ததாக ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் 4 பேர் மீது இரண்டு 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


Coimbatore: தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணி நடத்தியது. அந்த வகையில் கோவையில் சத்ரபதி வீரசிவாஜியின் 350வது முடி சூட்டிய விழா, அம்பேத்கர் பிறந்தநாள் விழா, வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழா என முப்பெரும் விழாவாக நடத்தப்பட்ட பேரணியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்று சீருடை அணிந்து ஊர்வலமாக சென்றனர்.



கோவை பொன்னையராஜபுரம் பகுதியில் துவங்கிய இந்த பேரணி, தியாகி குமரன் வீதி, இடையர் வீதி, தாமஸ் வீதி ஆகிய வீதிகளின் வழியாக வந்து ராஜவீதி தேர்முட்டி திடலில் நிறைவடைந்தது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற அளித்த விதிகளை மீறியதாகவும், பொது இடத்தில் சிலம்பம் சுற்றி ஆயுத பயிற்சி எடுத்ததாக கோவை வெரைட்டிஹால் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் விக்னேஷ் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் பசவலிங்கம் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் சுகுமார், துணை தலைவர் குமார், செய்தி மக்கள் தொடர்பு நிர்வாகி விஜயகுமார், கோவை மாநக செயலாளர் முருகன் உள்ளிட்டோர் மீது 151, 341, 290 மற்றும் 153 (aa)ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போலீசார் இரண்டு வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...