திருப்பூர் அருகே சொத்துக்காக இளைஞரை கட்டிப்போட்டு தாக்கிய உறவினர்கள் - வீடியோ வெளியீடு

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சொத்து பிரச்சனைக்காக ஆனந்த் என்பவரை, சக உறவினர்களே சாலையில் கயிற்றால் கட்டிப்போட்டு தாக்கினர். இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



கோவை: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே படியூர் பகுதியில் ஏசையன் என்பவருக்கும் ஆனந்த் என்பவரின் தாய்க்கும் சொந்தமான வீடு உள்ளது.

ஆனந்த் என்பவர் ஏசையனின் சொந்த அக்கா மகன்.இந்நிலையில், பாகப்பிரிவினை ஏற்படுத்தப்பட்ட நிலையில், ஆனந்த்தின் தாய்க்கு வரவேண்டிய பணத்தை, ஏசையன் தராமல் காலம் கடத்தி வந்துள்ளார்.



இதுகுறித்து, கடந்த 14ஆம் தேதி ஆனந்த், ஏசையன் வீட்டுக்கு சென்று கேட்டபோது, ஏசையன் அப்பகுதி இளைஞர்களை அழைத்து ஊர்விட்டு ஊர்வந்து சொத்தில் பங்கு கேட்பதாக கூறி, ஆனந்த்தை அங்கிருந்த இளைஞர்கள் உதவியுடன் கயிற்றின் மூலம் கட்டி சுமார் 3 மணி நேரம் வைத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கயிறுகளை அவிழ்த்து விட்டதாகவும், காயமடைந்த ஆனந்த் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்றதாகவும் தெரிகிறது.



இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் கூட, தன்னை தாக்கியவர்கள் மீது புகார் வழக்கு பதிவு செய்யாமல் தன் மீதும் இந்த பிரச்சனையில் சம்பந்தமில்லாத தனது தம்பி ஜெயக்குமார் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்ததாக ஆனந்த்குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 14ஆம் தேதி சம்பவம் நடைபெற்ற நிலையில், ஆனந்த் தாக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...