உடுமலை அருகே மூதாட்டியிடம் வழிப்பறி - இளைஞர்கள் 2 பேர் கைது!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சாலையில் நடந்து சென்ற பாண்டியம்மாள் எனும் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்து திருடிவிட்டு தப்பிய சூரியஜெகதீஸ், கார்த்தி என 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை கணக்கம் பாளையத்தை சேர்ந்தவர் பாண்டியம்மாள்(வயது65). இவர் கடந்த 10ம் தேதி, மாலை 6 மணிக்கு பொன்னேரியில் இருந்து அய்யம்பாளையம்புதுார் கிராமத்துக்கு செல்லும் சாலையில் நடந்து சென்றார்.

அப்போது, அவ் வழியாக பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள், பாண்டியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த செயினை அறுத்து கொண்டு தப்பியோடினர். இது குறித்து குடிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

அதில், மூதாட்டியிடம் இருந்து செயினை பறித்து சென்றது, கோட்டூர் தென்சங்கம்பாளையத்தை சேர்ந்த சூரியஜெகதீஸ்(வயது26) பொங்காளியூர் கார்த்தி(வயது26) என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் குடிமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

இந்த இரு நபர்கள் மீதும், 15க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியிருப்பது விசாரணையில் தெரியவந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த சில வழிப்பறி வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்ததையடுத்து, அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...