கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர் முகாம் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பன்னர் தலைமையில் நடைபெறுகிறது. உயர்கல்வி சேர்க்கை வழிகாட்டுதல் மற்றும் அரசு உதவிகள் வழங்கப்படும்.


Coimbatore: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர் முகாம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜூலை 10, 2026 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பன்னர் தலைமையில் நடைபெற உள்ளது.




இம்முகாமில் இவ்வாண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், 11ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கலந்து கொள்ளலாம். உயர்கல்வியில் சேருவதற்கு தேவையான சான்றுகள், அரசு சார்ந்த உதவிகள் மற்றும் அரசு சார்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.




அரசு ITI, Polytechnic மற்றும் அரசு கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, வேளாண் கல்லூரி, துணை மருத்துவம், சட்டம் போன்ற கல்லூரிகள் சார்ந்த சேர்க்கை தகவல்களை பெற்று பயன்பெறலாம். கல்விக்கடன் சார்ந்த உதவிகளையும் பெற்றிடலாம்.




முகாமில் பங்குபெறும் மாணவர்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைகளான வங்கி கணக்கு புத்தகம், ஆதார், சாதிச்சான்று, மதிப்பெண் பட்டியல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், குடும்ப அட்டை போன்றவைகளை தவறாமல் எடுத்துவர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பன்னர் தெரிவித்துள்ளார்.




சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் உயர்கல்வி கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ளலாம். தொடர்பு எண்கள்: 9487047568, 9788858829, 8754898863.

Newsletter

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...