பொள்ளாச்சி - கோவை சாலையில் ரூ.7 கோடி மதிப்பில் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் துவக்கம்!

பொள்ளாச்சி - கோவை சாலையில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜையை திமுக மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்



கோவை: பொள்ளாச்சி - கோவை சாலையில் அமைக்கப்பட உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் உட்மைப்பு வசதிகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி உள்ளிட்ட 7 இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைப்பதற்கு தமிழக முதல்வர் நிதிஒதுக்கீடு செய்தார்.



இதனையடுத்து பொள்ளாச்சி நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் நடவடிக்கையாக கோவை சாலையில உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், நகர மன்ற தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.



3.2 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள பேருந்து நிலையத்தில் 40 பேருந்துகள் நிறுத்தும் வசதி, 64 கடைகள், 2 தங்கும் விடுதிகள், பாதுகாப்பு அறை, பாலூட்டும் அறை, போக்குவரத்து அலுவலகம், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் 18 மாத காலத்திற்குள் நிறைவடையும் என நகர மன்ற தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் தெரிவித்தார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...