கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற்றார். 100க்கும் மேற்பட்ட கிராமங்களை தத்தெடுத்து மேம்படுத்தவும், போதையில்லா கோவை, பெண்கள் மேம்பாடு உள்ளிட்ட நல திட்டங்களை செயல்படுத்தவும் உறுதியளித்தார்.


Coimbatore: ரோட்டரி மாவட்டம் 3206-க்கு புதிய ஆளுநராக R.S. மாருதி பதவியேற்ற விழா கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி கூட்ட அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக குமரகுரு கல்வி குடும்பத் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், சர்வதேச ரோட்டரி அமைப்பின் இயக்குனர் முருகானந்தம், மற்றும் நிர்வாகிகள் செல்லா ராகவேந்திரன், ராஜசேகர், சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

புதிய ஆளுநராக பொறுப்பேற்ற R.S. மாருதி அனைவரது மத்தியிலும் கூறுகையில், "மிகப்பெரிய சமுதாய சேவை அமைப்பான ரோட்டரியில் வரும் நாட்களில் கோவை மாவட்டத்திற்கு பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். 100க்கும் மேற்பட்ட கிராமங்களை தத்தெடுத்து மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். போதையில்லா கோவை, ஆரோக்கியமான சமுதாயம், பெண்கள் மேம்பாடு என பல்வேறு திட்டங்களை வரக்கூடிய நாட்களில் செயல்படுத்த உள்ளோம்" என்று தெரிவித்தார்.


மேலும் அவர் கூறுகையில், "இயற்கையை மேம்படுத்த ஒரு புதிய கட்டமைப்பை ரோட்டரி கட்டமைப்பாக உருவாக்க உள்ளது. சமுதாய மேம்பாட்டிற்கு அர்ப்பணிப்பு உணர்வோடு நாங்கள் சேவைகளை முன்னெடுக்க உள்ளோம். கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் ரோட்டரி அமைப்பு தொடர்ந்து பங்களிக்கும்" என்று உறுதியளித்தார்.


பாரதிய வித்யா பவன் மற்றும் குமரகுரு கல்வி குழுமத்தின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் தனது உரையில், "சமுதாயத்திற்கு மிகப்பெரிய தேவை இது போன்ற ரோட்டரி அமைப்புகள். தங்களை அர்ப்பணித்து பல்வேறு சமூக பணிகளை முன்னெடுக்க உள்ள ஆளுநர் மாருதி உள்ளிட்ட நிர்வாகிகளை பாராட்டுவோம். இவர்களின் சேவை மனப்பான்மை சமுதாயத்திற்கு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை" என்று கூறினார்.


விழாவில் பல்வேறு ரோட்டரி அமைப்புகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்று புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். ரோட்டரி மாவட்டம் 3206 கோவை மாவட்டத்தில் பல்வேறு சமூக நல திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. புதிய ஆளுநர் மாருதியின் தலைமையில் இந்த சேவைகள் மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...