20 ஆண்டு காவல் பணி நிறைவு செய்த பெண் காவலர் - நற்சான்றிதழ் வழங்கி கவுரவிப்பு!

20 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றி தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கம் பெற்ற பெண் காவலர் பூங்கொடிக்கு, தமிழக அரசால் வழங்கப்படும் நற்பணி சான்றிதழை கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார் வழங்கி பாராட்டினார்.


கோவை: காவல்துறையில் 20 ஆண்டுகள் பணியாற்றிய பெண் காவலருக்கு கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

கோவை சரக பணியிடை பயிற்சி மையத்தில் பணிபுரிந்து வருபவர் பெண் காவலர் பூங்கொடி. இவருக்கு கடந்த ஜனவரி 26ல் சென்னையில் குடியரசு தின அணிவகுப்பின் போது, 20 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும், “தமிழக முதலமைச்சர் காவல் பதக்கம்” வழங்கப்பட்டது.

இந்நிலையில், பெண் காவலர் பூங்கொடிக்கு தமிழக அரசால் வழங்கப்படும் நற்பணி சான்றிதழ், கோவை சரக காவல்துறை அலுவலகத்தில் இன்று வழங்கப்பட்டது. இந்த சான்றிதழை கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார் நேரில் வழங்கி அவரை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...