கோவையில் பொது இடத்திலிருந்த 18 மரங்களை வெட்டிய நபர் மீது புகார்!

கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் பொது இடமான பூங்காவில் இருந்த 18 மரங்களை அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் வெட்டிய சம்பவம் தொடர்பாக காவல் நிலையம், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வனத்துறை உள்ளிட்ட அலுவலகங்களில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.



கோவை: கோவை மாவட்டம் ஜி.என்.மில்ஸ் அருகே பொது இடத்தில் இருந்த 18 மரங்களை வெட்டிய நபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.



ஜி.என்.மில்ஸ் அருகிலுள்ள சான்பிரிக்ஸ் என்ற தனியார் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 25 தனித்தனி வீடுகள் உள்ளன.



மேலும் 50 சென்ட்டில் பார்க் அமைந்துள்ளது. இந்த பார்க்கில் 50க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்க்கப்பட்டு வந்தன.

இந்த பார்க்கில் பெரியவர்கள், பெண்கள் வாக்கிங் போகவும், குழந்தைகள் விளையாடவும் பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே வெயில் காலம் என்பதால் இங்குள்ள மரங்கள் அங்குள்ளவர்களுக்கு இதமான சூழலை தருகின்றன.



இந்த நிலையில் அப்பகுதியில் குடியிருக்கும் பிரகாஷ் என்பவர் இன்று காலை பார்க்கிலுள்ள 18 மரங்களை திடீரென வெட்டியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்து அந்த பகுதி மக்கள் உடனடியாக கிராம நிர்வாக அலுவலர், காவல்துறையினர் மற்றும் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கொடுக்கும் புகாரை வைத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்வதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.

சுமார் அரை மணி நேரத்தில் வெயில் காலத்தில் நிழல் தந்த 18 மரங்களை வெட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...