கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி தூய்மை பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆய்வு செய்து அறிவுறுத்தல் வழங்கினார். தரமான பணிகள் உறுதி செய்யப்பட்டன.


Coimbatore: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் வார்டு எண் 27ல் பல்வேறு மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் ஆய்வு செய்து உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.




பீளமேடு சூர்யா கார்டன் பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல், தரமான முறையில் சாலை அமைக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது வார்டு உதவி பொறியாளர் குமார் உடனிருந்தார்.






அதேபோல், வார்டு எண் 27ல் உள்ள பீளமேடு துரைசாமி நாயுடு லேஅவுட் பகுதியில் மாஸ் கிளீனிங் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாலையோர செடிகள், குப்பைகள் மற்றும் சாக்கடைகளை முழுமையாக அகற்றி சுத்தம் செய்ய தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதன் மூலம் பகுதியை தூய்மையாக பராமரிக்கும் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.






சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பீளமேடு பாரதி காலனி பகுதியில் செயல்படும் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையத்தை கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் வருகைப் பதிவேடு மற்றும் குழந்தைகள் தடுப்பூசி பதிவேடுகளை விரிவாக ஆய்வு செய்தார். ஆய்வின்போது மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உடனிருந்து தேவையான விளக்கங்களை வழங்கினர்.






மேலும், பீளமேடு ஸ்ரீ கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளி முன்பகுதியில் மரக்குப்பைகள் அகற்றப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டது. பணிகளை நேரில் பார்வையிட்ட கவுன்சிலர் அம்பிகா தனபால், பள்ளி அமைந்துள்ள பகுதி என்பதால் குப்பைகள் மற்றும் மரக்குப்பைகளை தினசரி அகற்றுமாறு வார்டு சூப்பர்வைசருக்கு உறுதியான அறிவுறுத்தல் வழங்கினார்.






இவ்வாறு வார்டு 27ல் மேற்கொள்ளப்படும் பல்வேறு மேம்பாட்டு மற்றும் தூய்மை பணிகள் பொதுமக்களின் நல்வாழ்வுக்காக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...