கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி தூய்மை பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆய்வு செய்து அறிவுறுத்தல் வழங்கினார். தரமான பணிகள் உறுதி செய்யப்பட்டன.


Coimbatore: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் வார்டு எண் 27ல் பல்வேறு மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் ஆய்வு செய்து உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.




பீளமேடு சூர்யா கார்டன் பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல், தரமான முறையில் சாலை அமைக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது வார்டு உதவி பொறியாளர் குமார் உடனிருந்தார்.






அதேபோல், வார்டு எண் 27ல் உள்ள பீளமேடு துரைசாமி நாயுடு லேஅவுட் பகுதியில் மாஸ் கிளீனிங் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாலையோர செடிகள், குப்பைகள் மற்றும் சாக்கடைகளை முழுமையாக அகற்றி சுத்தம் செய்ய தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதன் மூலம் பகுதியை தூய்மையாக பராமரிக்கும் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.






சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பீளமேடு பாரதி காலனி பகுதியில் செயல்படும் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையத்தை கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் வருகைப் பதிவேடு மற்றும் குழந்தைகள் தடுப்பூசி பதிவேடுகளை விரிவாக ஆய்வு செய்தார். ஆய்வின்போது மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உடனிருந்து தேவையான விளக்கங்களை வழங்கினர்.






மேலும், பீளமேடு ஸ்ரீ கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளி முன்பகுதியில் மரக்குப்பைகள் அகற்றப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டது. பணிகளை நேரில் பார்வையிட்ட கவுன்சிலர் அம்பிகா தனபால், பள்ளி அமைந்துள்ள பகுதி என்பதால் குப்பைகள் மற்றும் மரக்குப்பைகளை தினசரி அகற்றுமாறு வார்டு சூப்பர்வைசருக்கு உறுதியான அறிவுறுத்தல் வழங்கினார்.






இவ்வாறு வார்டு 27ல் மேற்கொள்ளப்படும் பல்வேறு மேம்பாட்டு மற்றும் தூய்மை பணிகள் பொதுமக்களின் நல்வாழ்வுக்காக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...