தாராபுரம் அருகே அரசு பேருந்து மீது வேன் மோதி விபத்து - வேன் ஓட்டுநர் உட்பட 5 பேர் காயம்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பொன்னமராவதியில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பேருந்து மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் உட்பட 5 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து தாராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகிலுள்ள பொன்னமராவதியில் இருந்து கோவை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றது. அந்த பேருந்து தாராபுரம் பஸ் நிலையத்திற்குள் நுழைந்தது.

அப்போது, அந்த வழியாக வந்த வேன் எதிர்பாராத விதமாக அரசு பேருந்தின் பக்கவாட்டில் மோதியது.

இ்ந்த விபத்தில் வேனின் கேபினில் இருந்த டிரைவர் கணேசன் மற்றும் பவுன் ரிச்சர்ட், மணிகண்டன், மதன்குமார் ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர்.



உடனே, கேபின் கதவை உடைத்து அவர்கள் 4 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில், அரசு பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவரும் காயம் அடைந்தார். உடனே அவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அங்கிருந்தவர்கள் அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால், தாராபுரம் பஸ் நிலையத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவம் விபத்து குறித்து அரசு பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் வேன் ஓட்டுநர் கணேசன் ஆகியோரிடம் தாராபுரம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...