கோவை அருகே வனப்பகுதியில் காட்டுத் தீ - 8வது நாளில் முழுமையாக அணைத்த வனத்துறை!

கோவை ஆலாந்துறை மேற்குதொடர்ச்சி மலை வனப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்த காட்டுத் தீயை, வனத்துறையினரின் தொடர் போராட்டத்தால் முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது. புகை வரும் பகுதியில் வனத்துறை ஊழியர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவை ஆலாந்துறை அருகே உள்ள மேற்குதொடர்ச்சி மலை வனப்பகுதியில் கடந்த 11 ஆம் தேதி காட்டு தீ பிடித்தது. இதனை தொடர்ந்து, கடந்த 7 நாட்களாக காட்டுத் தீயை அணைக்க மதுக்கரை, கோவை, மேட்டுபாளையம், சிறுமுகை, நீலகிரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட வனச்சரகத்தை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தீவிர பணிகளை மேற்கொண்டனர்.



கூடுதலாக, இராணுவ ஹெலிகாப்டர் மூலம் சுமார் 22 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ஊற்றி பெரிய அளவிலான தீ அணைக்கப்பட்டது. மீதமுள்ள இடங்களில் எரிந்து வந்த காட்டுத் தீயை, நேற்று நள்ளிரவு வனத்துறை ஊழியர்கள் போராடி முழுமையாக அணைத்தனர்.

இதைத் தொடர்ந்து, 8 ஆவது நாளான இன்று புகை ஏற்பட்டுள்ள பகுதிகளில் வனத்துறை ஊழியர்கள் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த 7 நாட்களாக எரிந்த காட்டுத் தீயில், பல ஹெக்டேர் பரப்பளவில் இருந்து மரங்கள், செடிகொடிகள், புற்கள் எரிந்து சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...