உதகை - கேத்தி இடையே சிறப்பு மலை ரயில் சேவை! - சுற்றுலா பயணிகள் வரவேற்பு

கோடை சீசனுக்காக உதகையிலிருந்து கேத்தி ரயில் நிலையம் இடையே சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில், உதகை ரயில் நிலையத்திலிருந்து காலை 9.45 மணி, 11.30 மணி மாலை 3 மணி என வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கேத்தி வரை இயக்கப்படுகிறது.



நீலகிரி: மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள், யுனெஸ்கோ அந்தஸ்துபெற்ற பாரம்பரிய நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இதனால், தினந்தோறும் மேட்டுபாளையம் - குன்னூர் - உதகை இடையே மலை ரயில் இயக்கபட்டு வருகிறது. அதேபோல உதகை - குன்னூர் இடையிலும் மலை ரயில் சேவை செயல்பட்டுவருகிறது.



இந்த நிலையில், தற்போது கோடை சீசன் தொடங்கி உள்ளதை அடுத்து நீலகிரி மாவட்டத்திற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கி உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுவதால், வழக்கமாக இயக்கப்படும் மலை ரயிலில் இடம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.



இதனையடுத்து, கோடை சீசனுக்காக உதகையிலிருந்து கேத்தி ரயில் நிலையம் இடையே சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. உதகை ரயில் நிலையத்திலிருந்து காலை 9.45 மணி, 11.30 மணி மாலை 3 மணி என வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் இந்த மலை ரயில் கேத்தி வரை இயக்கப்படுகிறது.



உதகையிலிருந்து கேத்தி சென்று மீண்டும் உதகைக்கு சுற்றுலா பயணிகள் அழைத்து வரப்படுவார்கள். முதல் வகுப்பில் பயணம் செய்ய தலா 630 ரூபாயும், 2-ஆம் வகுப்பில் பயணம் செய்ய தலா 465 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுவதுடன் சிறப்பு சிற்றுண்டியும் வழங்கப்படுகிறது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...