தமிழகத்தில் 76 லட்சம் குழந்தைகளுக்கு ரூபெல்லா ஊசி போடப்பட்டுள்ளதாக சுகாதார துறை தடுப்பு ஊசி பிரிவு துணை இயக்குநர் தகவல்


தமிழகத்தில் 76 லட்சம் குழந்தைகளுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார துறை தடுப்பு ஊசி பிரிவு துணை இயக்குநர் தாமரை செல்வி தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை தடுப்பு ஊசி பிரிவு துணை இயக்குநர் தாமரை செல்வி கூறுகையில், தமிழகத்தில் 9 மாதங்கள் முதல் 15 வயது வரையுள்ள 1 கோடியே 76 லட்சம் குழந்தைகளில், தற்போது வரை 76 லட்சம் குழந்தைகளுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும், மீதமுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வருகின்ற மார்ச் 1 முதல் 14 ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி பாதுகாப்பானது, அதுகுறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். தொடர்ந்து, தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...