கோவை மயிலேரிபாளையத்தில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு!

கோவை மயிலேரிபாளையம் ஊராட்சியில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. திமுக தெற்கு மாவட்ட தலைவர் தளபதி முருகேசன், மரக்கன்றுகளை நட்டு இந்த பணியை தொடக்கி வைத்தார்.


கோவை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் 70 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் துவங்கியுள்ளது.



முதல்கட்டமாக மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் மயிலேரிபாளையம் ஊராட்சியில் சுமார் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. திமுக தெற்கு மாவட்ட தலைவர் தளபதி முருகேசன் இந்த பணிகளை மரக்கன்றுகளை நடவு செய்து துவங்கி வைத்தார்.



ஊராட்சி ஊழியர்கள், தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் இணைந்து வேப்பை, மாமரம், கொய்யா உள்ளிட்ட ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்தனர்.

இது குறித்து திமுக மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் கூறுகையில்,

கலைஞர் நூற்றாண்டு மற்றும் முதல்வர் 70 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகளை நடவு செய்ய உள்ளோம். இந்த மரக்கன்றுகளை அந்தந்த ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகத்தினர் வேலிகள் அமைத்தும், தண்ணீர் ஊற்றியும் பராமரிக்க உள்ளனர்.

மேலும் கோவை தெற்கு மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகளை அடுத்தடுத்து நடவு செய்யும் பணிகளை கட்சி நிர்வாகிகள், தன்னார்வலர்கள் மூலம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.



இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் கே.கே.செந்தில்குமார், மயிலேரிபாளையம் ஊராட்சி தலைவர் கோமதி திருமூர்த்தி, ஊராட்சி செயலாளர் பி.திருமூர்த்தி, ஊராட்சி துணை தலைவர் என்.சுப்பிரமணியம், மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...