போலி நகைகளை அடகு வைத்து ரூ.81 லட்சம் மோசடி - வங்கி மேலாளர் உட்பட 3 பேர் கைது!

திருப்பூர் - அவிநாசி சாலையில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் வாடிக்கையாளர்கள் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து, ரூ. 81 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளர், துணை மேலாளர் உள்பட மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.81 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளர் உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் - அவிநாசி சாலையில் தனியார் வங்கியில் (பெட் பேங்க், வங்கி சாரா நிதி நிறுவனம்) செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில், வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகையை மீட்கும் போது அதே வாடிக்கையாளர் பெயரில் போலியாக நகைகளை அடகு வைத்து 81 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆண்டு கணக்கு தணிக்கையின் போது ரூ.81 லட்சம் மோசடி செய்யப்பட்டதை கண்டறிந்த மண்டல மேலாளர் சரண் சிவகுமார் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.



இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளர் சிவா, உதவி மேலாளர் பிரபு மற்றும் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் விஸ்வநாதன் ஆகிய மூன்று பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போலி நகைகளை அடகு வைத்து 81 லட்சம் ரூபாய் மோசடி செய்த மேலாளர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...