நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் மலைவாழ் மக்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். பாரம்பரிய இசை, கரகாட்டம் மற்றும் பழங்குடியின நடன நிகழ்ச்சிகள் விழாவை சிறப்பித்தன.


கோவை: கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராம மக்களின் குலதெய்வமான அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா சனிக்கிழமை பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.

புனரமைக்கப்பட்ட கோவிலில் பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.



விழாவில் சிறப்பு விருந்தினராக தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.

நல்லூர்பதி கிராமத்திற்கு வருகை தந்த அவருக்கு மலைவாழ் மக்கள் தங்களது பாரம்பரிய இசைக் கருவிகளை முழக்கி, கரகாட்டம் மற்றும் பழங்குடியின பாரம்பரிய நடனங்களை நிகழ்த்தி உற்சாக வரவேற்பு அளித்தனர். இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் இணைந்து தங்களது பாரம்பரிய கலை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.



பின்னர், எஸ்.பி.வேலுமணி கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, மகா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுடன் கலந்துரையாடினார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...