நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் மலைவாழ் மக்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். பாரம்பரிய இசை, கரகாட்டம் மற்றும் பழங்குடியின நடன நிகழ்ச்சிகள் விழாவை சிறப்பித்தன.


கோவை: கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராம மக்களின் குலதெய்வமான அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா சனிக்கிழமை பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.

புனரமைக்கப்பட்ட கோவிலில் பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.



விழாவில் சிறப்பு விருந்தினராக தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.

நல்லூர்பதி கிராமத்திற்கு வருகை தந்த அவருக்கு மலைவாழ் மக்கள் தங்களது பாரம்பரிய இசைக் கருவிகளை முழக்கி, கரகாட்டம் மற்றும் பழங்குடியின பாரம்பரிய நடனங்களை நிகழ்த்தி உற்சாக வரவேற்பு அளித்தனர். இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் இணைந்து தங்களது பாரம்பரிய கலை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.



பின்னர், எஸ்.பி.வேலுமணி கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, மகா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுடன் கலந்துரையாடினார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...