கோவையில் சிறுவனுக்கு சூடு வைத்த வளர்ப்பு தந்தை - போலீசில் புகார்!

கோவையில் 7வயது சிறுவனுக்கு சூடு வைத்து சித்ரவதை செய்த வளர்ப்பு தந்தை மீது, சிறுவனின் தந்தை உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


கோவை: கோவையில் சிறுவனுக்கு வளர்ப்பு தந்தை சூடு வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுல்தான் இப்ராஹிம் (33), இவர் கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியை சேர்ந்தவர் சர்மதா என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 7 வயது மகன் உள்ளார்.

இந்நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக சர்மதா இப்ராஹிமை பிரிந்து தனது மகனுடன் ஆட்டோ ஓட்டுநரான சாதிக்(38) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு உக்கடம் புல்லுக்காடு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் குழந்தையின் வளர்ப்பு தந்தையான சாதிக் கடந்த 15 ஆம் தேதி தோசை கரண்டியால் உடலில் சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாகத் தெரிகிறது.

இதையடுத்து கோவை வந்த தந்தை இப்ராஹிடம் சிறுவன் நடந்ததை கூறியுள்ளார். சிறுவனுக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய வளர்ப்பு தந்தை மீது நடவடிக்கை எடுக்க கோரி, தந்தை இப்ராஹிம் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...