பல்லடம் அண்ணாமலையார் கோவிலில் மனமுருகி வேண்டும் சிறுவன் - வைரல் வீடியோ!

பல்லடம் அடுத்த இடுவாய் கிராமத்தில் உள்ள உண்ணாமலை அம்பிகை சமேத அண்ணாமலையார் திருக்கோயிலில் தேவாரம் மற்றும் திருவாசகம் பாடல்களை பாடி சிவபெருமானை மனமுருக வேண்டும் 2ஆம் வகுப்பு படிக்கும் பள்ளிச் சிறுவனின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


திருப்பூர்: பல்லடம் அடுத்த இடுவாய் அருகே அண்ணாமலையார் கோவிலில் திருவாசகம் பாடி மனம் உருக வேண்டும் சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இடுவாய் கிராமத்தில் உண்ணாமலை அம்பிகை சமேத அண்ணாமலையார் திருக்கோயில் அமைந்துள்ளது.



இங்கு எழுந்தருளியுள்ள அண்ணாமலையார் மூலவர் சிலைக்கு முன்பு ஓம் என்ற இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தேவாரம், திருவாசகம் பாடலை மனமுருக பாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டை பெற்று வருகிறது.



இடுவம்பாளையத்தில் வசித்து வரும் முருக பாண்டியன் என்பவரது மகன் ஓம் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தேவாரம் திருவாசகத்தில் இருந்து 74 பதிகங்களை பாடி அசத்தும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சிறுவயதிலேயே இத்தகைய ஞாபக சக்தியோடும், பக்தியோடும் பாடும் சிறுவனின் பாடல்கள் சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...