கோவை துடியலூர் காவல் நிலைய ஆய்வாளராக ரத்தினகுமார் நியமனம்

கோவை துடியலூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே பணிபுரிந்து வந்த ஞானசேகரன் கோவில்பாளையம் காவல் நிலையத்திற்கு மாறுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், துடியலூர் காவல் ஆய்வாளராக ரத்தினகுமார் நியமிக்கப்பட்டார்.


கோவை: துடியலூர் காவல் நிலையத்திற்கு புதிய காவல் ஆய்வாளராக ரத்தினகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் கவுண்டம்பாளையம், சேரன் நகர், ஐ.டி.ஐ. இடையர்பாளையம், ஜி.என்.மில்ஸ், வெள்ளக்கிணர், துடியலூர், விஸ்வநாதபுரம், என்.ஜி.ஜி.ஓ.காலனி, அப்பநாயக்கன்பாளையம், வடமதுரை உள்ளிட்ட பகுதிகளை காவல் எல்லையாகக் கொண்டு துடியலூர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

துடியலூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே பணிபுரிந்து வந்த ஞானசேகரன் கோவில்பாளையம் காவல் நிலையத்திற்கு மாறுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் ரத்தினகுமார் துடியலூர் காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து இன்று துடியலூர் காவல் நிலையம் வந்த ஆய்வாளர் ரத்தினகுமார் அலுவலக கோப்புகளில் கையெழுத்திட்டுப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அவருக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இரத்தினக்குமர் ஏற்கனவே திருப்பூர் மாவட்டம் தெற்கில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...