வால்பாறையில் காட்டு யானைகள் 3வது நாளாக நடமாட்டம் - வனத்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கோவை மாவட்டம் வால்பாறை அருகே மூன்றாவது நாளாக உலாவரும் காட்டு யானைகள் அங்குள்ள கோவில், குழந்தைகள் காப்பகம் போன்றவைகளை உடைத்து சேதப்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். குடியிருப்புப் பகுதியில் உலாவரும் யானைகளை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதியில் நுழைந்து, வீடுகள், மளிகை கடைகள், ரேஷன் கடைகள், போன்றவைகளை உடைத்து உள்ளிருக்கும் உணவுப் பொருட்களை சாப்பிட்டு செல்கிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.யானைகள் மனித மோதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இந்நிலையில், வால்பாறை அருகே பண்ணிமேடு எஸ்டேட் பகுதிகளில் 7 காட்டு யானைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக அப்பகுதியில் உள்ள கோவில், குழந்தைகள் காப்பகம் ஆகிய கட்டிடங்களை இடித்து சேதப்படுத்தியது. யானைகள் நடமாட்டம் கண்டறிந்து வனத்துறையினர் யானைகளை வன பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இதனிடையே வால்பாறைக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி, யானைகள் கோவிலை உடைத்ததை அறிந்து அப்பகுதிக்குவந்து மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.வனத்துறையினரிடம் வன பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகளை குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், இது குறித்து சட்டசபையில்பேசி குடியிருப்பு பகுதிகளை சுற்றி மின் வேலி, அகழி போன்றவைகளை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் அவர் தெரிவித்து சென்றார்.

யானைகள் நடமாட்டம்இருப்பதால் மக்கள் வனப்பகுதிக்குள் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...