வடவள்ளியில் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைக்க கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கட்டிடம் மற்றும் கழிப்பிடம் அகற்றம்

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் மேற்கு மண்டலம், வடவள்ளியில் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்காக நுழைவாயிற் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 8 கடைகள் கொண்ட பழைய வணிக வளாக கட்டிடம் மற்றும் பழைய கழிப்பிடங்கள் இன்று (1.03.2017) அகற்றப்பட்டு வழித்தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், "கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், வடவள்ளியில் பேருந்துகள் நிறுத்துமிடம் உள்ளது. பேருந்துகள் நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லாததால், உத்தேச பேருந்து திருப்புமுனையம் போதுமான வகையில் பேருந்துகள் இடையூரின்றி நுழையும் வசதி மற்றும் வெளியேறும் வசதி ஏற்படுத்தும் வகையில் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்கான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமையும் நுழைவாயிற் பகுதியில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகள் சர்வே செய்து அப்புறப்படுத்தவும், பேருந்துகள் நுழைவுப் பகுதியிலுள்ள மிகப்பழமையான கழிப்பிடங்களையும் மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான சிறு கடைகளையும் அகற்றி மாற்று ஏற்பாடு செய்தும், பேருந்து நிலையம் உள்பகுதியில் நுழைய இடவசதி ஏற்படுத்தும்படியும் திட்டமிட்டு, வடவள்ளியில் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்கான பணிகள் வரைவில் மேற்கொள்ளப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தோம். 



அதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக கடந்த 20.01.2017 அன்று மேற்கு மண்டல உதவி ஆணையர் கே.ராமைய்யா, உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் வடவள்ளியில் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்காக நுழைவாயிற் பகுதியில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புக் கடைகள் மற்றும் தனியார் அலுவலகங்கள் காவல்துறை உதவியுடன் மாநகராட்சிப் பணியாளர்களைக் கொண்டு அகற்றப்பட்டு, புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

தற்பொழுது அதன் தொடர்ச்சியாக இன்று (மார்ச் 1) வடவள்ளியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 8 கடைகள் கொண்ட பழைய வணிக வளாக கட்டிடம் மற்றும் பழைய கழிப்பிடங்கள் காவல்துறை உதவியுடன் மாநகராட்சிப் பணியாளர்களைக் கொண்டு பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு, பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்கு நுழைவாயிற் பகுதியாக வழித்தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இதனால் திருப்புமுனையத்திற்கு வருகின்ற பொது மக்கள் இடையூறு இல்லாமல் பேருந்துகள் மற்றும் வாகனங்களில் வந்து செல்வதற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இடையர்பாளையம் சாலை மற்றும் மருதமலை சாலை சந்திப்பு பகுதி விஸ்தரிக்கப்பட்டு, சாலை அகலப்படுத்தியும் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்கான ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளபட்டுள்ளது" என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...