வால்பாறை அருகே 3 சிறுத்தைகள் நடமாட்டம் - சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

வால்பாறை அருகே மலுக்கபாறை எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் மூன்று சிறுத்தைகள் நடமாடும் காட்சி அப்பகுதியில் உள்ள காவல்நிலைய சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. சிறுத்தைகள், யானைகள், கரடிகள் போன்ற விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சில தினங்களாக குடியிருப்பு பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துவந்தனர். வீட்டில் வளர்க்கும் ஆடு, கோழி, நாய் போன்ற வளர்ப்பு பிராணிகளை சிறுத்தை கொன்று சாப்பிட்டுச் சென்றதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், வால்பாறை அருகே உள்ள மலுக்கப்பாறை எஸ்டேட் பகுதியில் மூன்று சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி வருவது அங்குள்ள காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இரவில் குடியிருப்புகளில் இருந்து நாய், கோழி, ஆடு போன்றவைகளை வேட்டையாடி சாப்பிட்டுவிட்டு தேயிலை தோட்டத்திற்கு அவை சென்றுவிடுகின்றன.



தற்போது காவல் நிலைய சிசிடிவி கேமராவில் பதிவான சிறுத்தை நடமாடும் காட்சிகள் வெளியாகியுள்ளதால், வால்பாறை பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...