திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி அமராவதி அணையில் 38.98 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 40.46 அடியாகவும் நீர்மட்டம் பதிவாகியுள்ளது. நீர்வளத்துறை அதிகாரிகள் விவரம் வெளியிட்டுள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்து கிடைத்து வருவதால் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. ஜூலை 3 ஆம் தேதி நிலவரப்படி இரு அணைகளின் நீர்மட்ட விவரங்களை நீர்வளத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்து கிடைத்து வருவதால், ஜூலை 3 ஆம் தேதி இன்றைய நிலவரப்படி 38.98 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 234 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக 30 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணை 60 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்து கிடைப்பதால், ஜூலை 3 ஆம் தேதி இன்றைய நிலவரப்படி 40.46 அடியாக நீர்மட்டம் உள்ளது.
திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 382 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 370 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்மேற்கு பருவமழை காலத்தில் மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்து கிடைத்து வருவதால், ஜூலை 3 ஆம் தேதி இன்றைய நிலவரப்படி 38.98 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 234 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக 30 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணை 60 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்து கிடைப்பதால், ஜூலை 3 ஆம் தேதி இன்றைய நிலவரப்படி 40.46 அடியாக நீர்மட்டம் உள்ளது.
திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 382 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 370 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்மேற்கு பருவமழை காலத்தில் மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.