சூலூர் அருகே பாரம்பரிய பவளக்கொடி கும்மியாட்டம் - ஆர்வத்துடன் பார்த்து ரசித்த பொதுமக்கள்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே கம்மாளப்பட்டி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பு மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற பவளக்கொடி கும்மியாட்ட நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகள் பங்கேற்று பாரம்பரிய நடனமாடியதை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.


கோவை: சூலூர் அருகே கம்மாளப்பட்டி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான சுயம்பு மாரியம்மன் திருக்கோவில் பொங்கல் மற்றும் பூச்சாட்டு விழா கடந்த மே 9ஆம் தேதி தொடங்கி, சக்தி கலசம் எடுத்தல், மாவிளக்கு பூஜை, அம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்வு, விளக்கு பூஜை போன்ற நிகழ்ச்சிகளோடு நடைபெற்று வருகிறது.

இதையொட்டி,பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் உட்பட 200 பேர் பங்கேற்ற கர்ணன் கலைக்குழுவின் பவளக்கொடி கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.



கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையில் ஒன்றான கும்மி ஆட்டத்தின் மூலமாக மாரியம்மனை அழைத்து வழிபாடு செய்யும் வகையில், அம்மன் பாடல்களை கும்மிப்பாடலாக பாடி கைகளைத் தட்டி கும்மியடித்து அவர்கள் ஆடினர். குழந்தைகளே கும்மி பாடல்களை அழகு கொங்கு தமிழில் பாடி அம்மனை அழைத்த நிகழ்வு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.



ஒரே சீருடையில் கும்மி பாடலுக்கு ஏற்ப, கைகளை தட்டி கும்மியாடி பெண்கள், குழந்தைகள் கும்மி ஆட்டத்தை சிறப்பித்தனர்.



பவளக்கொடி கும்மி ஆட்ட ஆசிரியர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கும்மி ஆட்டத்தை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...