கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை - பாஜகவை முந்துகிறது காங்கிரஸ்..!!

கர்நாடகாவில் கடந்த 10ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. காலை 9 மணி நிலவரப்படி, காங்கிரஸ் 106 தொகுதிகளிலும், பாஜக 82 தொகுதிகளிலும் முன்னிலை வகித்துவருகிறது.


224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 10ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் இதுவரை இல்லாத வகையில் 73.91 சதவீத வாக்குகள் பதிவாயின.

இதைத் தொடர்ந்து, 36 மையங்களில் வாக்கு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதைத் தொடர்ந்து தொகுதிவாரியாக பதிவாக வாக்குகள் எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

தொடக்கம் முதலே காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆளும்கட்சியான பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பின்தங்கியுள்ளன.

காலை 9 மணி நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி 106 தொகுதிகளில் முன்னிலை வகித்துவருகிறது. பாஜக 82 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 21 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்துவருகிறது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையைப் பெற 113 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை வகித்துவருவதால், பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் அக்கட்சியினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, வெற்றிபெறும் காங்கிரஸ் வேட்பாளர்கள் உடனடியாக பெங்களூருவுக்கு விரைந்து வரவேண்டுமென கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...