கோவை அருகே கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட விவசாயி - போலீஸ் விசாரணை!

கோவை இக்கரை போளூவாம்பட்டியில் உள்ள விவசாய தோட்ட கிணற்றில் சின்னதுரை என்ற விவசாயி சடலமாக மீட்கப்பட்டார். சம்பவம் குறித்து ஆலந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை ஆலாந்துறை அடுத்த இக்கரை போளூவாம்பட்டி, ராஜாஜி வீதியை சேர்ந்தவர் சின்னதுரை (வயது60).

இவர் விவசாயம் செய்து வந்தார். இவரது மகன் சக்திவேல் தனியார் வங்கி மேலாளராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சின்னதுரை தனது பக்கத்து தோட்டத்தை சேர்ந்த சுந்தரசாமி என்பவருடன் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

பின்னர் சுந்தரசாமி வீட்டிற்கு கிளம்பிய நிலையில், நீண்ட நேரமாக சின்னதுரை அவரது வீட்டிற்கு செல்லாமல் இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், சுந்தரசாமியின் தோட்டத்தில் இருந்த சகுந்தலா என்பவர் கிணற்றில் பார்த்தபோது, சின்னசாமி கிணற்றில் சடலமாக மிதந்தது தெரியவந்தது.

இதையடுத்த, அவர் உடனடியாக ஆலாந்துறை போலீசுக்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சின்னதுரையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சின்னதுரையின் மகன் சக்திவேல் அளித்த புகார் அடிப்படையில் ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...