நான்கு சக்கர வாகனம் வாங்கியதில் மோசடி - போத்தனூர் போலீசில் பாதிக்கப்பட்டவர் புகார்!

கோவை எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரிடம் நான்கு சக்கர வாகனத்தை வாங்கிவிட்டு, அதற்கான ரூ.6 லட்சம் பணத்தை கொடுக்காமல் மோசடி செய்த தேனியைச் சேர்ந்த சுரேஷ் மீது போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை மதுக்கரை ரோடு எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து.

இவரது மகன் ரமேஷ்குமார் (42). இவர் பிரின்டிங் பிரஸ் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு தனது நான்கு சக்கர வாகனத்தை தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த ராஜா மகன் சுரேஷ் (வயது45) என்பவருக்கு விற்பனை செய்ய ரமேஷ்குமார் பேசியுள்ளார்.

இதையடுத்து ,கோவை வந்த சுரேஷ், எம்.ஜி.ஆர் நகரில் உள்ள ரமேஷ் குமாரின் வீட்டிற்கு வந்து ரூ.10 ஆயிரம் மட்டும் முன்பணமாக கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ.6 லட்சம் பணத்தை ஏழு நாட்களுக்குள் கொடுப்பதாக கூறிவிட்டு நான்கு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளார்.

அதைத் தொடர்ந்து, அவர் பணத்தை தராமல் இருந்ததோடு, சுரேஷ் செல்போனில் அழைத்தபோதும் அதை எடுக்காமல் தவிர்த்து வந்தார்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுரேஷ், போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மோசடி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...