கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை!

கோவை கோனியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள நிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது யார், உண்டியலில் பணம், நகை எவ்வளவு இருந்தது என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அன்றாடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து, தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் கோவில் உண்டியலின் பூட்டை உடைத்து அதிலிருந்த பணம், நகை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.



உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளை போயிருந்ததை கண்ட கோவில் காவலாளி அதிர்ச்சியடைந்து உடனே இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் மற்றும் காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர்.



மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி பணத்தை கொள்ளையடித்து சென்ற நபர்களின் உருவம் பதிவாகியுள்ளதா? என்பது குறித்தும் சோதனை செய்து வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் கோவில் தேர் திருவிழா பல ஆயிரம் பக்தர்கள் புடைசூழ வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்த நிலையில் உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது? அதனை கொள்ளையடித்து சென்றவர்கள் யார்? இந்த சம்பவத்தில் ஒரே நபர் ஈடுபட்டாரா? அல்லது கூட்டு சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனரா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...