தமிழகத்தில் 26,000 கோவில்களில் அர்ச்சகர்கள் இல்லை - முன்னாள் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தகவல்!

கோவையில் நடைபெற்ற உலக சிவனடியார்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் ஐ.ஜி.பொன்மாணிக்க வேல், தமிழகத்தில் 26,000 கோவில்களில் அர்ச்சகர்கள் இல்லாத சூழல் நீடிக்கிறது. இந்த கோவில்களில் உள்ள தெய்வ திருமேனிகளை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.


கோவை: தமிழகத்தில் 26,000 கோவில்களில் அர்ச்சகர்கள் இல்லாத சூழல் நீடிப்பதாக முன்னாள் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

கோவை பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் திருமடத்தில் உலக சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் சைவப்பெருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வை தொடர்ந்து, பொன்மாணிக்கவேல் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,



உலகில் பல நாடுகளிலும் சிவனடியார்கள் உள்ளனர். குறிப்பாக தமிழகத்திலுள்ள சிவனடியார்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வர வேண்டும்.

அதற்கான நோக்கம் ஒன்று தான். நம் முன்னோர்கள் தேடி வகுத்துக் கொடுத்து கோவில்களை இறைவனின் திருமேனிகளையும் பாதுகாப்பது தான். தமிழகத்தில் 26,000 கோவில்களில் அர்ச்சகர்கள் இல்லாத சூழல் நீடிக்கிறது.

அனைத்து கோவில்களிலும் உள்ள தெய்வ திருமேனிகளை பாதுகாக்க வேண்டும். அதற்கு 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் உலக சிவனடியார் திருக்கூட்டத்தில் இணைய வேண்டும். தெய்வ தொண்டு ஆற்ற வேண்டும்.

அப்போது இந்து சமயம் தழைத்தோங்கும், கோவில்களும், திருமேனிகளும் பாதுகாக்கப்படும். அடுத்து வரும் தலைமுறையினருக்கு வழிகாட்டுதலாக இருக்கும். கோவில் சிலை திருட்டு வழக்குகள் பதிவு செய்வதில் காவல்துறையினர் அக்கரை காட்டவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...