‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை வெளியிட கோரி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் மண்டியிட்டு மனு!

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடவும், திரையரங்குகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கிட கோரியும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் பதாகைகளை ஏந்தியபடி மண்டியிட்டு மனு அளித்தனர்.


கோவை: தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிடக் கோரி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் மனு அளித்தனர்.

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. ஆனால் இத்திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்புகள் வெளியானதை தொடர்ந்து இத்திரைப்படம் ஒரே நாள் மட்டுமே திரையரங்கில் ஓடியது. குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டும் இரண்டு நாட்கள் ஓடியது.



இதனையடுத்து பாஜக உட்பட பல்வேறு இந்து அமைப்புகள் இந்த திரைப்படத்தை அரசு உரிய பாதுகாப்பு வழங்கி திரையிட வேண்டும் என வலியுறுத்தினர். எனினும் திரைப்படம் எந்த திரையரங்குகளிலும் திரையிடப்படவில்லை.



இந்நிலையில் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் தலைமையில், அந்த இயக்கத்தினர், இத்திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடவும் திரையரங்குகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கிட கோரியும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதாகைகளை ஏந்தி மண்டியிட்டு மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...