சொத்துகளை விற்றுவிட்டு கவனிக்காமல் விட்ட பிள்ளைகள் - திருப்பூர் ஆட்சியரிடம் மூதாட்டி மனு!

சொத்துகளை விற்றுவிட்டு தன்னை கவனிக்காமல் தனியாக விட்டுச் சென்ற மகன் மற்றும் மகள்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 80வயது மூதாட்டி ஒருவர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.


திருப்பூர்: சொத்தை விற்று பங்கு போட்டுக் கொண்டு, தன்னை கவனிக்காமல் விட்ட பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர் மனு அளித்துள்ளார்.

திருப்பூர் சூசையாபுரம் பகுதியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டிக்கு சொந்தமான வீடு மற்றும் 5 சென்ட் இடத்தை இரண்டு ஆண் பிள்ளைகள் மற்றும் மூன்று பெண் பிள்ளைகள் அனைவரும் சேர்ந்து 60 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.



சொத்தை விற்பனை செய்த பிறகு மூதாட்டியை பிள்ளைகள் யாரும் கவனிக்காமல், எதிர்காலத்திற்கு தேவையான எந்த வழியும் செய்யாமல் மோசடி செய்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் தான் தற்போது சூசையாபுரத்தில் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் வாழ்ந்து வருவதாக கூறியுள்ள மூதாட்டி, மாவட்ட நிர்வாகம் முதியோர் பாதுகாப்பு சட்டத்தின்படி தனது சொத்துக்களை விற்று, தன்னை கவனிக்காமல் சென்ற பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுத்து தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...