நொய்யல் ஆற்றில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க கோரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு!

நொய்யல் ஆற்றில் மருத்துவக் கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டுவதை தடுத்து நிறுத்தி நொய்யல் ஆற்றை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.


கோவை: நொய்யல் ஆற்றில் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டுவதை தடுக்க கோரி நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நொய்யல் ஆற்றில் சில தினங்களுக்கு முன்பு தொழிற்சாலை ரசாயன கழிவுகள் கலந்ததால் நுரைத் ததும்பி ஓடும் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து நொய்யல் ஆற்றை பாதுகாக்க வேண்டும் என பல்வேறு பொதுமக்கள் விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே மாவட்ட ஆட்சியரும் அப்பகுதியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் நொய்யல் ஆற்றில் மருத்துவமனை கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள், வீட்டு கழிவுகள் அனைத்தும் கலக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் நொய்யல் ஆறு மாசடைந்து விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

எனவே இவற்றைத் தடுத்து நிறுத்தி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தம், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

மேலும் நொய்யல் ஆற்றின் நீரை சுத்தப்படுத்தி நொய்யல் ஆற்றை பாதுகாக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...