கோவையில் தனியார் நிறுவன இயக்குநர் வீட்டில் தங்க கட்டி திருட்டு - பெண் கைது!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில், மயில் மார்க் சம்பா ரவை நிறுவன இயக்குனர் பொன் முருகன்(46) என்பவரது வீட்டில் இருந்த 150 கிராம் எடையுள்ள தங்க கட்டிகளை திருடிச் சென்ற பணிப்பெண் ஜோதி என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


கோவை: கோவையில் தங்க கட்டிகளை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் அடுத்த சிரியன் சர்ச் சாலை பகுதியை சேர்ந்தவர் பொன் முருகன் (46).

இவர் பிரபல மயில் மார்க் சம்பா ரவை நிறுவனத்தில் இயக்குனராக உள்ளார். இவரது வீட்டில் வைத்திருந்த சுமார் 150 கிராம் தங்க பிஸ்கட், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமாகியுள்ளது.

இதையடுத்து பொன்முருகன் தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தார்.

அப்போது அவரது வீட்டு வேலைக்கு இருந்த ஒண்டிப்புதூர் காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஜோதி (47) என்பவர் தங்கக் கட்டியை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து பொன்முருகன் ஆர்.எஸ் புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜோதியை கைது செய்து அவரிடமிருந்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் ஜோதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...