கோவையில் ரோஜ்கார் மேளாவில் 371 பேருக்கு பணி நியமன ஆணை - மத்திய இணையமைச்சர் பங்கேற்பு!

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்வி வளாகத்தில் நடைபெற்ற ரோஜ்கார் மேளா நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் ஜான் பர்லா கலந்து கொண்டு, 371 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.


கோவை: குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்வி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 371பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

மத்திய, மாநில அரசு துறைகளில் புதிதாகப் பணியமர்த்தப்பட்ட சுமார் 71,000 பணியாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக பணி நியமன ஆணைகளை இன்று வழங்கினார். இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெற்றது.



இதன் ஒரு பகுதியாக கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்வி வளாகத்தில் நடைபெற்ற ரோஜ்கார் மேளா நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் அமைச்சகத்தின், மத்திய இணை அமைச்சர், ஜான் பர்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.



இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அஞ்சல் துறை, தொழிலாளர் ஈட்டுறுதி கழகம் மற்றும் ரயில்வே துறையில் புதிதாக பணியமர்த்தப்பட்ட 371 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இதில் 25 பேருக்கு நேரடியாக மத்திய இணை அமைச்சர் ஜான் பர்லா ஆணை கடிதங்களை வழங்கினார்.

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...