கோவை பீளமேடு அருகே இளைஞரை கத்தியால் குத்திய வடமாநில முதியவர் கைது!

கோவை - அவிநாசி சாலையில் விமான நிலையம் அருகே கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் ஒரிசாவை சேர்ந்த பிராவாட் மாலிக் (28) என்பவரை லாஜ்ரூஷ் டொப்போ (70) என்ற முதியவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவை அருகே செல்போன் காணாமல் போனதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வடமாநில இளைஞரை முதியவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரிசா மாநிலம் கொன்டரப்பரா பகுதியை சேர்ந்த மோகன் மாலிக் என்பவரது மகன் பிராவாட் மாலிக் (28). இவர் கோவை - அவிநாசி சாலையில் விமான நிலையம் அருகே கட்டப்பட்டு வரும் தனியார் கண் மருத்துவமனை கட்டட வேலைக்காக அதே பகுதியில் சக ஒடிசா தொழிலாளர்களுடன் தங்கி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் பிராவாட் மாலிக் அறையில் தங்கிருக்கும் லாஜ்ரூஷ் டொப்போ (70) என்பவரது செல்போன் மாயமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறையில் இருந்த பிராவாட் மாலிக்கிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த லாஜ்ரூஷ் டொப்போ அங்கிருந்த கத்தியை எடுத்து பிராவாட் மாலிக் வயிற்றில் குத்தியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை சக தொழிலாளிகள் மீட்டு அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த பீளமேடு போலீசார் இளைஞரை கத்தியால் குத்திய லாஜ்ரூஷ் டொப்போவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...