பூச்சியூர் அருள்மிகு ஸ்ரீ வேட்டக்காரசாமி கோவிலில் பெரிய சுவாமி திருவிழா

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பூச்சியூர் அருள்மிகு ஸ்ரீ வேட்டக்காரசாமி திருக்கோவிலில் 12ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பெரிய சுவாமி திருவிழா நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டப்பட்டு பக்தர்களுக்கு விருந்து வைக்கப்பட்டது.



கோவை: நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பூச்சியூர் அருள்மிகு ஸ்ரீ வேட்டக்காரசாமி திருக்கோவிலில் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பூச்சியூர் அருள்மிகு ஸ்ரீ வேட்டக்காரசாமி திருக்கோவிலில் பெரிய சுவாமி திருவிழா நடைபெற்றது. இந்த கோவிலில் அருள்மிகு பொன்னார்,சங்கர்,தங்காள், செல்லாண்டியம்மன் ஆகிய தெய்வங்கள் உள்ளன. இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த பெரிய சுவாமி திருவிழா நடைபெறும்.



கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில் பொன்னர்,சங்கர்,தங்காள் வீர வரலாறு உடுக்கை கதை, பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.தொடர்ந்து பூச்சியூர் விநாயகர் கோவிலிலிருந்து சக்தி கரகம் அழைத்தல், சாம்புகன் சாமியை மேடைக்கு அழைத்து வருதல், தங்காளுக்கு கிளி பிடிக்கச் செல்லுதல்,



கொம்பனை சாம்புகன் சாமி மேடைக்கு அழைத்து வருதல், செம்மறி ஆட்டுக்கிடாவுடன் மேளதாளம் முழுங்க பறை சாற்றி வருதல் தங்காள் செல்லாண்டியம்மன் தீர்த்தம் எடுத்து வந்து தெளித்து அண்ணன்மார்களை எழுப்புதல் நிகழ்ச்சிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்றன.



இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர், இவ்விழாவில் முக்கிய நிகழ்வாக கொம்பனை குறி வைத்தல் நிகழ்ச்சியில் பன்னியை வேல்கொம்பு கொண்டு பூசாரி வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.



சாம்புகன் பூஜை செய்து தீர்த்தம் வழங்கி கிடாவெட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டு பக்தர்களுக்கு விருந்து வைக்கப்பட்டது.

இறுதியாக சாமியை ஊர்வலமாக எடுத்து வந்து கங்கையில் விடுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவிற்காக தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் 2 நாட்களுக்கு முன்பே இங்கு வந்துள்ளனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...