திருப்பூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை - 2 ஆயிரம் வாழை மரங்களும் நாசம்!

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. திருப்பூர் அடுத்த மணியக்காரம்பாளையத்தில் வீசிய சூறைக்காற்று காரணமாக கணேசன் என்பவரின் தோட்டத்தில் 4 ஏக்கரில் பயிரிட்டிருந்த 2 ஆயிரம் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கொங்கு மண்டலமான கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்நிலையில் நேற்று திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியும் நிலவியது. மழையின் போது பல்வேறு பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்றும் வீசியது.

இந்நிலையில் மாவட்டத்தில் காலை 7 மணி நிலவரப்படி திருப்பூர் வடக்கு பகுதியில் 2 மி.மீ. குமார் நகர்ப் பகுதியில் 1 மி.மீ, திருப்பூர் தெற்கு பகுதியில் 13 மி.மீ, பல்லடம் ரோடு பகுதியில் 2 மி.மீ, ஊத்துக்குளியில் 12 மி.மீ, மடத்துக்குளத்தில் 5 மி.மீ, குண்டடத்தில் 6 மி.மீ, உப்பாறு அணைப்பகுதியில் 17 மி.மீ, உடுமலையில் 14.10 மீ.மீ, அமராவதி அணைப்பகுதியில் 16 மி.மீ, பல்லடத்தில் 3 மி.மீ என மொத்தம் 91.10 மி.மீட்டர் மழைப் பதிவானது.

இதன் சராசரி 4.55 மி.மீட்டர் ஆகும். இதற்கிடையே திருப்பூரை சேர்ந்த கணேசன் (59) என்பவர் நல்லூர் மணியக்காரம்பாளையத்தில் 4 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் வாழை பயிரிட்டிருந்தார். அனைத்து வாழைகளும் நன்கு விளைந்து குழை தள்ளிய நிலையிலிருந்தன.



சூறாவளிக் காற்றின் காரணமாக 4 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 2 ஆயிரம் வாழை மரங்களும் முறிந்து நாசமாகின.



இதன் மதிப்பு ரூ.14 லட்சம் எனத் தெரிவித்த கணேசன், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...