திருப்பூருக்கு ரேஷன் அரிசி கடத்தல் - கோவையில் 4 பேர் கைது!

கோவையிலிருந்து திருப்பூர் அரவை மில்லுக்கு ரேஷன் அரிசி கடத்திய நான்கு பேரை பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2.9 டன் அளவிலான ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு கூடுதல் இயக்குனர் அருண் உத்தரவின் பெயரில் தமிழக முழுவதும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி உத்தரவின் பெயரில் பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் நேற்று மாலை கோவை - பேரூர் சாலையில் உள்ள பேரூர் சோதனைச் சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த மினி ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் சுமார் 2.90 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாரதிவேல் (வயது28) மற்றும் அவருக்கு உதவியாய் வந்த பாரதி ஆகிய இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் அதே பகுதியில் உலா வந்ததை அடுத்து அவர்களையும் மடக்கி பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அதில், பிடிபட்ட நபர்கள் கோவையை சேர்ந்த கார்த்திகேயன் என்பதும், அவருடன் வந்தவர் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பாரதி என்பதும் தெரியவந்தது. இதில் கார்த்திகேயன் பேரூர் சுற்றுவட்டார பகுதிகளில் மலிவு விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதனை திருப்பூரில் உள்ள அரவை மில்லுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.



இதையடுத்து நான்கு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 2.90 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...