பல்லடம் அருகே பாக்கியை கேட்க வந்த ரைஸ்மில் உரிமையாளர் மீது மிளகாய் பொடி தூவி சரமாரி தாக்குதல் - பரபரப்பு!

பல்லடம் அருகே கணபதி பாளையத்தில் 6 மாதங்களாக பாக்கி வைத்திருந்த அரிசி மூட்டைக்கான பணத்தை கேட்க வந்த ரைஸ்மில் உரிமையாளர் சீனிவாசன் மீது மளிகை கடை உரிமையாளர்கள் இருவர் மிளகாய் பொடியை தூவி சரமாரி தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: பல்லடம் அருகே அரிசி மூட்டைக்கான பாக்கி பணத்தை கேட்க வந்த ரைஸ் மில் உரிமையாளர் மீது மிளகாய் பொடியை தூவி, சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடி அடுத்த பள்ளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் சொந்தமாக ரைஸ் மில் ஒன்றை நடத்தி வருகிறார். தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் குடோன் அமைத்து மளிகை கடைகளுக்கு அரிசி மூட்டைகளை விநியோகம் செய்து வருகிறார்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்திலும் பல்லடம் அருகே சின்னாண்டி பாளையம் என்ற இடத்தில் குடோன் அமைத்து கணபதிபாளையம் பகுதியில் உள்ள மளிகை கடைகளுக்கு அரிசி மூட்டைகளை விற்பனை செய்து வருகிறார்.

இதனிடையே கணபதி பாளையத்தில் உள்ள பெரியசாமி என்பவருக்கு சொந்தமான மளிகை கடைக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அரிசி மூட்டைகளை விற்பனைக்கு கொடுத்துள்ளார். ஆறு மாதங்களாக அரிசி மூட்டைக்கான பணத்தை பெரியசாமி சீனிவாசனுக்கு கொடுக்காமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று பெரியசாமியின் கடைக்கு வந்த ரைஸ் மில் உரிமையாளர் சீனிவாசன் பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளார்.



பணத்தை கொடுக்க முடியாது உன்னால் முடிந்ததை பார் எனக்கூறி தனது சகோதரர்கள் ஐந்து பேருடன் சேர்ந்து சீனிவாசன் மீது மிளகாய் பொடியை தூவி அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.



அவரது கார் மீது கற்களை வீசி கார் கண்ணாடியை உடைத்து விட்டு கடையை மூடிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

படுகாயம் அடைந்த சீனிவாசனை மீட்ட அப்பகுதி மக்கள் அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரைஸ் மில் உரிமையாளர் மீது மிளகாய் பொடி தூவி சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் தாக்குதலில் ஈடுபட்ட பெரியசாமி என்பவரின் கடையில் கஞ்சா, குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக ஏற்கனவே காவல்துறையில் புகார் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...