சூலூர் நீர்நிலைப் பகுதியில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் மணியில் ஈடுபட்ட பொது மக்கள் மற்றும் தன்னார்வலர்கள்


சூலூர் நீர் நிலை பகுதிகளில் வளர்ந்துள்ள உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் பொதுமக்கள், பொது நல அமைப்புகள் ஈடுபட்டுள்ளனர்.



சீமை கருவேல மரங்கள் நீலத்தடி நீர் அதிகம் உருஞ்சுவதால் அதனை அகற்ற வேண்டும் என சென்னை உயர்ந்திமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்யபட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசு இதனை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது.



இதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

அதன்படி கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சூலூர் நீர் நிலை மேலான்மை குழு அமைப்புகள் என 25 குழுக்கள் கொண்ட பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் அலோசனை கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



இக்கூட்டத்தில் நீர் நிலை பகுதிகளில் வளர்ந்துள்ள மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக இன்று காலை சூலூர் பகுதிகளில் உள்ள மரங்களை அகற்றும் பணி துவங்கியது. இப்பணிகளை ஆர்வி.எஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் குப்புசாமி துவக்கி வைத்தார்.

12 ஜே சி பி 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு சூலூர் குளம், அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள குட்டைகள் ஆகிய பகுதிகளில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணியில் சூலூர் பகுதி அனைத்து அரசியல் கட்சியினர், பொது நல அமைப்பினர், பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து அனைத்து நில நீர் நிலை மேலான்மை குழுவினர் கூறும்போது தொடர்ந்து சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடரும் என தெரிவித்தனர்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...