உதகை செல்ல முடியாமல் தவிக்கும் பொது மக்கள் - போதிய அரசு பேருந்து வசதி இல்லை என குற்றச்சாட்டு

கோடை விடுமுறையில் ஏராளமான மக்கள் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வரும் நிலையில், சாய்பாபா கோயில் பகுதியில் இருந்து உதகைக்கு போதிய அரசு பேருந்து வசதி இல்லாததால், சுற்றுலா பயணிகள் பலரும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர்.



கோவை: சாய்பாபா கோவில் பகுதியில் இருந்து உதகைக்கு போதிய பேருந்து வசதி இல்லாததால், பொதுமக்கள் பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். 

குழந்தைகளுக்கு பள்ளிகள் விடுமுறை என்பதாலும் கோடை வெயில் அதிகமாக இருப்பதாலும் சுற்றுலா பயணிகள் உதகை மற்றும் கோத்தகிரி படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், சாய்பாபா கோயில் பகுதியில் இருந்து அரசு பேருந்து கோவையில் இருந்து உதகை செல்கிறது. 



இதனிடையே போதிய அரசு பயணிகள் பேருந்து இல்லாததால் உதகைக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள், அரை மணி நேரத்திற்கு ஒருமுறை அரசு பேருந்து இயக்கப்படுகிறது என கூறுகின்றனர். 



ஆனால் ஒரு மணி நேரம் காத்திருந்தும், அரசு பேருந்து வரவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அங்கு பயணிகள் பேருந்து வந்தவுடன் அங்குள்ள பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு அந்த வண்டியில் ஏறுவது வாடிக்கையாகி வருகிறது. 



இதனால் அதிகமான அரசு பேருந்துகளை உதகைக்கு இயக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...