தாராபுரம் அருகே விபத்தில் சிக்கிய நபரை காப்பாற்ற உதவிய அமைச்சர் மற்றும் ஆட்சியருக்கு குவியும் பாராட்டு!

தாராபுரம் அருகே விபத்தில் படுகாயம் அடைந்த நபரை மீட்டு உரிய சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்.மு.பெ. சாமிநாதன் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


திருப்பூர்: விபத்தில் சிக்கிய நபரை காப்பாற்ற உதவிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஆகியோருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து சேலம் மாவட்டம் எடப்பாடி செல்வதற்காக நான்கு பேர் காரில் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் தாராபுரம் அடுத்த காங்கேயம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது பக்கம் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணம் செய்த இருவர் படுகாயம் அடைந்தனர். மற்ற இருவர் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினர்.

இந்த நிலையில் தாராபுரம் பகுதியில் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக மக்கள் செய்தி தொடர்பு துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் ஆகியோர் அந்த வழியாக சென்றுள்ளனர்.



அப்போது அவர்கள் இருவரும் காரில் இருந்து இறங்கி விபத்தில் படுகாயம் அடைந்த நபர்களை  மீட்டு 108 அவசர ஊர்தி மூலம் காங்கேயம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.



திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ்  மற்றும் அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் சாலை விபத்தில் படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு உரிய சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.



அரசு விழாவிற்கு செல்ல காலதாமதம் ஆனாலும் பரவாயில்லை விபத்தில் இருந்தவரை மீட்டு உரிய சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்.மு. பெ. சாமிநாதன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர். கிறிஸ்துராஜ் ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...