கோவையில் மளிகை கடை உரிமத்தை புதுப்பிக்க ரூ.7,000 லஞ்சம் - உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கைது!

கோவை வடவள்ளி அடுத்த நவாவூர் பகுதியில் துரைசாமி என்பவருக்கு சொந்தமான மளிகை கடையின் உரிமத்தை புதுப்பிக்க ரூ.7,000 லஞ்சமாக வாங்கிய மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் வெங்கடேஷ் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கையும் களவுமாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: கோவையில் மளிகை கடை உரிமத்தை புதுப்பிக்க ரூ.7,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் வெங்கடேஷ் என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கோவை வடவள்ளி அருகே நவாவூர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (78). இவர் அதே பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் லாலிரோட்டில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும் வெங்கடேஷ் என்பவர் துரைசாமியின் கடைக்கு சென்று ஆய்வு செய்துள்ளார். 

அப்போது கடையின் உரிமம் காலவதியாகி இருந்தது. இதையடுத்து அதை புதுப்பிக்க வேண்டும் என்று துரைசாமியிடம் வெங்கடேஷ் கூறியுள்ளார். மேலும் உரிமத்தை புதுப்பிக்க ரூ.20 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. பின்னர் அதை குறைத்து ரூ.15 ஆயிரம் கேட்டதாக தெரிகிறது. ஆனாலும் பெரிய தொகையென துரைசாமி கூறியதால் இறுதியாக ரூ.7 ஆயிரம் கேட்டு உள்ளார். 

இந்நிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத துரைசாமி கோவை லஞ்ச6 ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து ரசாயனம் தடவிய ரூ.7 ஆயிரம் ரூபாயை துரைசாமியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பினர். அந்த ரூபாய் நோட்டுகளுடன் உணவு பாதுகாப்பு அலுவலர் வெங்கடேசை துரைசாமி தொடர்புகொண்டு பேசினார். 

அப்போது அவர் வடவள்ளி சாலை பால்கம்பெனி அருகே துரைசாமியை வர அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை துரைசாமி, உணவு பாதுகாப்பு அலுவலர் வெங்கடேஷிடம் கொடுத்தார். 

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் திவ்யா தலைமையிலான போலீசார் வெங்டேசை சுற்றி வளைத்தனர். கையும் களவுமாக பிடிபட்ட வெங்கடேசை லாலிரோட்டில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...