கோவையில் தனியார் கல்லூரி பேராசிரியையிடம் நகையை பறிக்க முயற்சி - இளைஞர் கைது!

வெள்ளலூர் அருகே என்.ஜி ஆர் சாலையில் சென்ற தனியார் கல்லூரி பேராசிரியரான ஜெயகௌரி (44) என்பவரது கழுத்தில் இருந்த நகையை இளைஞர் ஒருவர் பறிக்க முயன்ற நிலையில், அந்த இளைஞரை அங்கிருந்தவர்கள் உதவியுடன் பேராசிரியர் ஜெயகௌரியே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: வெள்ளலூர் அருகே கல்லூரி பேராசிரியரிடம் செயின் பறிக்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை வெள்ளலூர் என்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் வாசு என்பவரது மனைவி ஜெயகௌரி (44). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். 

இந்த நிலையில் புதன்கிழமை மாலை பணி முடிந்து வந்த ஜெயகௌரி என்.ஜி ஆர் சாலையில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது பின்னால் வந்த இளைஞர் ஒருவர் திடீரென ஜெயகௌரி கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றார்.

சுதாரித்துக் கொண்ட ஜெயகௌரி அந்த இளைஞரை மடக்கி பிடித்தார். இதை அடுத்து அங்கிருந்தவர்களும் கூடி இளைஞரை பிடித்து, போத்தனூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். 

விரைந்து வந்த போலீசார் இளைஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் பிடிபட்ட நபர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த சிவக்குமார் மகன் அருண்குமார் (25) என்பது தெரியவந்தது.

மேலும், கோவை வெள்ளலூர் பகுதியில் தங்கி கால் டாக்ஸி ஓட்டுனராக வேலை செய்து வந்த இவர், பணத்திற்காக பேராசிரியை ஜெயகௌரியின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...