கோவை சூலூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது - ரூ.40,000 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்!

சூலூர் அடுத்த பள்ளபாளையம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் மேற்கொண்ட ரோந்து பணியின் போது, கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சரவணன், அஸ்வின், சுஜித், மற்றும் கிரிதரன் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.40,000 மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 4 பேரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

கோவை மாவட்டத்தில் கஞ்சா புழக்கத்தை தடுக்க காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை பள்ளபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சூலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதன் அடிப்படையில் சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன் மேற்பார்வையில் உதவி காவல் ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் அப்பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சரவணன், அஸ்வின், சுஜித், மற்றும் கிரிதரன் உள்ளிடோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

இதனையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.40,000 மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர்களில் சரவணன், அஸ்வின் மற்றும் சுஜித் ஆகியோர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நடைபெற்று வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...